கைலை கைலாசம் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை

கைலை மலை திருக்கயிலாய மலை கைலாசம்

கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள். தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்

  • கயிலை-மலை.jpg

    கைலை மலை திருக்கயிலாய மலை கைலாசம்

    கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும்,மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும் கிழக்கு முக தரிசனம் தத்புருஷ முக தரிசனம் என்றும் அழைக்கபடுகிறது.இதில் தெற்கு முகம் தான் இந்தியாவை நோக்கி உள்ளது.. தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கங்கை இறங்கிய ஜடா முடியும் சிவபெருமானின் மூன்று கண்களும் உள்ள முகம். மேலும் இம்முகத்தில் அடாத செயல் செய்த இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பும் உள்ளதுகைலாயம்

    கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும் என்கிறது புராணங்கள்.


  • பஞ்சபூதங்கள்

    சிவனின் பூதங்களின் திருத்தலங்களை கோவில்

    தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் இங்கு அருள்பாலித்து வருகிறார்.பஞ்சபூதங்களே உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் உருவாக்கம், அவற்றின் வாழ்க்கை மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு மூலாதாரமாக உள்ளன. எனவேதான் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

    தென்னிந்தியாவில் இறைவனான சிவபெருமான் அருள்புரியும் ஐந்து வழிபாட்டிடங்கள் பஞ்சபூதத் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். நிலம் – ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம் – தமிழ்நாடு நீர் – ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல் – தமிழ்நாடு நெருப்பு – அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை – தமிழ்நாடு காற்று – காளத்தியப்பர் கோவில் திருகாளகத்தி – ஆந்திரப்பிரதேசம் ஆகாயம் – நடராஜர் கோவில் சிதம்பரம் – தமிழ்நாடு

  • நவகிரக-தலங்கள்

    சிவபெருமான் நவக்கிரக தலங்கள் கோவில்

    ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைபாடு,அவற்றின் தாக்கம் ஓருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.'நவ' என்றால்ஒன்பது என்றும் 'கிரகம்' என்றால் கோள் என்றும் பொருள்படும். நவக்கிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களை குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60கி.மீ சுற்றில் அமைந்துள்ளது..

    திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.